9. அப்பாலும் அடிசார்ந்தார்

இவர், சேர, சோழ, பாண்டியர் மற்றும் பெருநிலக் குறுநில மன்னர்களது தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பாற்பட்ட நாடுகளும், திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பட்ட அடியார்களது காலத்துக்கு முன்னும், பின்னும் பூக்கள் சூடிய நீண்ட சடைமேல், அடம்பு, தும்பை மலர்களும், கங்கையும், கொன்றையும் பொருந்தும்படி சூடிய இடபதைப் பொறித்த கொடியினை உடைய சிவனடியிற் சார்ந்தார்களும் ஆவர். சிவனடியார்களின் தொகுதி காலத்தையும், இடத்தையும் கடந்து நிற்க, அவர்களின் சிவனடிமைத் திறம் எக்காலத்திலும், எவ்விடத்திலும் நிகழும்.

திருநாள் : பங்குனிக் கடைசி நாள்