திருப்பைஞ்ஜீலி

இறைவர் : நீலகண்டர், ஞீலவனேசுவரர்
இறைவி : விசாலாட்சி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 3
தலமரம் : ஞீலி

ஸ்ரீஞீலவனேசுவர ஆலயம். பெரிய கோயில். திருப்பைஞ்ஜீலிச் சிவபெருமான், நாவுக்கரசருக்கு கட்டமுது தந்த வரலாறு அழகிய ஓவியமாக, கோயிலில் தீட்டப் பட்டுள்ளது. இராச கோபுரத்துக்கு எனப் பெரிய அளவில் அதிட்டானம் போடப்பட்டுள்ளது. ஆனால் அது பல ஆண்டுகள் கழிந்து, இன்றும் மொட்டைக் கோபுரமாகவே உள்ளது. உள்ளே 3 நிலைக் கோபுரம் உண்டு. தலமரம் ஞீலி (ஒரு வகைக் கல்வாழை). வாகனங்கள் உண்டு. அம்பாள் கோயில் கிழக்கு பார்த்தபடி. சுவாமி கோயில் இடது பக்கம் தனியாக உண்டு. அப்பருக்கு கட்டமுது கொடுத்த திருவிழா, அவருடைய குருபூசைத் தினமாகிய (Incomplete)

சோழநாடு, காவிரி வடகரை : 61